Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அக்டோபர் 20, 2023 05:56

திருச்செங்கோடு: திருச்செங்கோடு கோட்டத்தில் உள்ள திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் பரமத்திவேலூர் ஆகிய அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இன்று (20ம்தேதி) காலை 10.30 மணிக்கு வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கூட்ட அரங்கில், ஆர்.டி.ஓ தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், விவ சாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள், தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட் பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்ப டும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் மனுக்களாக அளிக்கலாம் என வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தெரிவித் துள்ளார்.

தலைப்புச்செய்திகள்